பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு – அதிரடி உத்தரவால் அதிகாரிகள் வருத்தம்!

0
பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு - அதிரடி உத்தரவால் அதிகாரிகள் வருத்தம்!
பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு - அதிரடி உத்தரவால் அதிகாரிகள் வருத்தம்!
பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு – அதிரடி உத்தரவால் அதிகாரிகள் வருத்தம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியவற்றை பற்றி பார்ப்போம்.

மாணவர் சேர்க்கை

மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் நடைபெறுவதால் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தற்போது மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் போலி மாணவர்களின் சேர்க்கையை கட்டுப்படுத்திட வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ரூ.1000 பொங்கல் ரொக்கப்பரிசு வாங்காதவர்களின் எண்ணிக்கை – கூட்டுறவுத்துறை வெளியீடு!!

Follow our Instagram for more Latest Updates

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் சம்பந்தப்பட்ட மாணவர் மற்றும் பெற்றோரின் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்று கட்டாயமாக்கியுள்ளது. அத்துடன் விண்ணப்பத்துடன் மாணவர் மற்றும் பெற்றோரின் புகைப்படம் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இதனை மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இது மட்டுமல்லாமல் விண்ணப்ப படிவத்தின் ஒரு நகல் பள்ளியிலும் மற்றொரு நகல் மாவட்ட கல்வி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனால் கூடுதலான காகித ஆவணங்களை சேமிக்க வேண்டியுள்ளதால் கல்வி அதிகாரிகள் எவ்வாறு சேமிப்பது என்பது குறித்து வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த ஆவணங்களை எவ்வளவு காலம் சேமிக்க வேண்டும் என்பது அறியாமல் கவலை தெரிவிக்கின்றனர்

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!