மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) – பயணப்படி உயர்வு கிடையாது!!
மத்திய அரசு ஊழியர்களுக்கான 2021 ஜூலை மாத அகவிலைப்படி (DA) உயர்வுடன், பயணப்படி உயர்வு (TA) இருக்காது என்று தேசிய கவுன்சில் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
அகவிலைப்படி உயர்வு:
கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த 2020 ஜனவரி 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான DA தொகை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2020 ஜனவரி முதல் 2020 ஜூன் வரையும், 2020 ஜூலை முதல் 2020 டிசம்பர் வரையும், 2020 ஜனவரி முதல் ஜூன் வரையும் என்று மூன்று தவணை அகவிலைப்படியானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – மாநில அரசு விளக்கம்!!
இந்நிலையில் மத்திய அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கான நிறுத்தி வைக்கப்பட்டிருந்த DA தொகை வரும் 2021 ஜூலை 1ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதனால் பல ஊடகங்களும் DA தொகை 25% ஆக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. பொதுவாக ஒவ்வொரு தவணைக்கு 2% DA உயர்த்தப்படுவது வழக்கம். இறுதியாக 17% DA வழங்கப்பட்டது. அதன்படி, நிறுத்தி வைக்கப்பட்ட 3 தவணை மற்றும் 2021 ஜூலை உடன் சேர்த்து மொத்தம் 25% DA வழங்கப்படும் என்று எதிர்பார்ப்புகள் இருந்தது.
தேசிய கவுன்சில் ஜே.சி.எம் இன் பணியாளர் பக்கச் செயலாளர் டி.ஏ.சிவ் கோபால் மிஸ்ரா அவர்கள் செய்தியாளர்களிடம் DA உயர்வு பற்றி பேசினார். அதில், மத்திய அரசு பணியாளர்களுக்கான DA உயர்த்தப்படுவது உண்மை தான். ஆனால் அதனுடன் பயணப்படி உயர்வு என்பது உறுதி செய்யப்படவில்லை. ஏனெனில் 25% DA இருந்தால் மட்டுமே பயணப்படி (TA) உயரும். தற்போது ஊழியர்களின் DA 17% ஆக மட்டுமே உள்ளது என்று அறிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
மத்திய, மாநில மற்றும் அனைத்து துறைகளிலும் ஊதிய உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். யாரை கேட்டாலும் லட்சத்திற்கு மேல் ஊதியம் பெறுவதாக கூறுகிறார்கள்.
உங்கள் கருத்து தவறு.முற்றிலும் தவறு