அக்.3 முதல் அரசு அலுவலகங்கள் மீண்டும் திறப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
மிசோரம் மாநிலத்தில் தற்போதுள்ள கொரோனா தொற்று நிலவரத்தை ஆய்வு செய்த மாநில அரசு முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை திருத்தி தற்போது புதிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்வு
நாடு முழுவதும் தற்போது கொரோனா பேரலை தொற்று ஓய்ந்திருக்கும் சூழலில் மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுபாடுகள் அனைத்தும் தற்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மிசோரம் மாநிலத்திலும் தற்போது நோய் தொற்று சூழல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் ஐஸ்வால் நகராட்சி மற்றும் பிற மாநகராட்சிப் பகுதிகளில் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளை எளிதாக்க அரசு சில கூடுதல் தளர்வுகளை வழங்கியுள்ளது.
அக்டோபர் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் – இலங்கை அரசின் புதிய அறிவிப்பு!
இது தொடர்பாக அம்மாநில அரசு பிறப்பித்த உத்தரவின்படி, ‘மிசோரம் மாநிலத்தில் புதிய விதிகள் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் அக்டோபர் 16 வரை அமலில் இருக்கும். கொரோனா வழக்குகள் தொடர்ந்து அதிகரித்த போதிலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதை விட, நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்’ என்று அரசு தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில் மிசோரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,626 புதிய வழக்குகள் மற்றும் 3 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இப்போது அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின் கீழ்:
- அனைத்து வணிகக் கடைகள், சந்தை இடங்கள், ஸ்டால்கள், ஹோட்டல்கள், உணவகங்கள் 50 சதவிகித இருக்கை திறனுடனும் மற்றும் சுற்றுலா லாட்ஜ்கள், AMC பகுதிகள் முழுவதுமாக திறக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
- இருந்தாலும் AMC பகுதியில் உள்ள தேவாலயங்கள் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் வார இறுதி நாட்களில் 50 சதவிகித இருக்கை திறனுடன் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
- இதற்கு முன்னதாக ஆகஸ்ட் 22 முதல் AMC பகுதிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
- மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
- AMC பகுதியில் பள்ளி மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
- ஆனால் மாநில தலைநகரில் 50 சதவீத இருக்கை திறன் கொண்ட பயிற்சி நிறுவனங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.
திருப்பதி தரிசனம் – 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு கட்டுப்பாடு? தேவஸ்தானம் விளக்கம்!
- AMC பகுதிக்கு வெளியே கொரோனா இல்லாத நகரங்களில் பள்ளிகள் KG முதல் 12 ஆம் வகுப்பு வரையும் திறந்திருக்கும்.
- கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் செப்டம்பர் 5 முதல் செயல்படுகின்றன.
- பொதுப் பூங்காக்கள் AMC பகுதியில் கூட 50 பங்கேற்பாளர்களை கொண்டு செயல்படலாம்.
- ஆண்டுவிழா அல்லது பிறந்தநாள் கொண்டாட்டங்கள், சமூகம் அல்லது பொதுக் கூட்டங்கள் இப்போது AMC பகுதியில் 50 % இருக்கை திறன் அல்லது 50 பங்கேற்பாளர்களுடன் அனுமதிக்கப்படுகிறது.
- இப்போது இறுதிச் சடங்குகள் மற்றும் திருமணங்களில் 50 விருந்தினர்கள் அல்லது உட்காரும் திறனில் 50 சதவீதம் வரை அனுமதிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் உள் மாநில இயக்கம் அனுமதிக்கப்படுகிறது. - அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.