TNPSC ரூ.75,900 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 42 காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு TNPSC தேர்வுக்கான அறிவிப்பு ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை-III பதவிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை பற்றி பார்ப்போம்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அனைத்து போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 2, 2ஏ தேர்வு கடந்த மே 21ம் தேதி அன்று திட்டமிட்டபடி நடைபெற்றுள்ளது. அத்துடன் குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை-III பதவியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – மே 26 இல் தர்ணா போராட்டம்!
இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்று நிலவரப்படி 25 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கான தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 10ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
இப்பணியில் நியமிக்கப்படுபவர்களுக்கு ரூ.20,600 முதல் ரூ.75,900 மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக வருகிற ஜூன் 17ம் தேதிக்குள் விண்ணப்பித்து முடிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். மேலும் இத்தேர்வு தொடர்பான கூடுதல் தகவல்களை பெற https://www.tnpsc.gov.in/