வங்கி கடன் தவணை (EMI) செலுத்துவதில் சலுகைகள் – RBI திட்டம்!!
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக ரிசர்வ் வங்கி கடன் பெற்றவர்களுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி :
இந்தியா முழுவதும் கடந்த வருட மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வந்ததை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் அதிக பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மின்னல் வேகத்தில் பரவி வரும் வைரஸை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு மட்டுமே தீர்வாக உள்ளது. இந்நிலையில் சில மாதங்களாக இரண்டாம் அலை வேகமெடுத்து பரவி வருகிறது. மருத்துவ நிபுணர்களும் நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடம் – மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்!!
முழு ஊரடங்கின் விளைவாக மக்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். நாடும் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. வங்கிகளில் கடன் பெற்றவர்கள் கடன் தவணையை திருப்பி செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு கடந்த வருடம் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மாதத் தவணை செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்படுவதாக மார்ச் 27ஆம் தேதியில் மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மேலும் மூன்று மாதங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது.
TN Job “FB Group” Join Now
இந்த வருடம் ரூ.25 கோடி வரையில் கடன் பெற்ற தனிநபர்கள் மற்றும் சிறு குறு நிறுவனங்கள் கடன் தவணைச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருந்தார். இது இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கடன் தவணைச் சலுகைக்கு விண்ணப்பிக்க 2021 செப்டம்பர் 31 வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இச்சலுகைக்கு வாடிக்கையாளர்கள் விண்ணப்பித்தவுடன் அடுத்த 90 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வங்கிகள் இதற்கான செயல்முறைகளை முடித்து சலுகையை வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
Pls sir cm m k Stalin sir no Eim 1 year no Eim sir pls pls monthly 30000 thousand sir pls
Personal loan venum sir….
S