பள்ளி மாணவர்களுக்கு ‘ஹேப்பினஸ் கிட்’ – 1.83 லட்சம் நிதி ஒதுக்கீடு!!
ஒடிசா மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள 5 மாவட்டங்களில் ‘ஹேப்பினஸ் கிட்’ வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஹேப்பினஸ் கிட்’:
இந்தியாவில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் பொதுத்தேர்வு காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மட்டும் திறக்கப்பட்டன. பல மாநிலங்களில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!!
இந்நிலையில் அக்ஷய பாத்ரா அறக்கட்டளை மாணவர்களுக்கு ‘ஹேப்பினஸ் கிட்’ வழங்க அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. தற்போது அதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி 5 மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு ‘ஹேப்பினஸ் கிட்’ வழங்கப்படும். அதில் கோதுமை, மஞ்சள் தூள், வேர்க்கடலை, வெல்லம், சுண்டல், இலவங்கப்பட்டை, ஏலக்காய், பிஸ்கட் மற்றும் பிற சத்தான உணவு பொருட்கள் இருக்கும்.
வேலை வாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
மாணவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாகும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒடிசா மாநிலத்தில் உள்ள 1,916 பள்ளிகளை சேர்ந்த 1.83 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு வழங்க அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மாநிலத்தில் அக்ஷய பாத்ரா அறக்கட்டளை சார்பில் மதிய உணவும் வழங்கப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்