100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் சம்பளம் உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை ஒடிசா அரசு உயர்த்தி உள்ளது. இந்த அறிவிப்பை அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்பு அந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜூலை 12 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – டெல்லி அரசு அறிவிப்பு!
கொரோனா என்னும் கொடிய வைரசால் நாடே முடங்கி உள்ளது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் மிகுந்த அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் இதனை கருத்தில் கொண்டு ஒடிசா மாநில அரசு இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு உதவும் நோக்கில் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கடந்த மாதம் ரூ.1,690 கோடி நிதி ஊக்குவிப்பு திட்டத்தை அறிவித்தார்.
இன்று மாலை 6 மணிக்கு ‘வலிமை அப்டேட்’ – நடிகர் அஜித் ரசிகர்கள் உற்சாகம்!
மேலும் கடந்த மூன்று மாதங்களாக 32 லட்சம் பேர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஒடிசா மாநில முதலமைச்சர் தற்போது அவர்களின் ஊதியத்தை அதிகரித்து உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதாவது அவர்களின் ஒரு நாள் ஊதியத்தை 50 ரூபாய் அதிகரித்து ரூ.207-லிருந்து ரூ.257 ஆக வழங்குவதாக அறிவித்தார். இதற்கென ரூ.532 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ்நாட்டிலும் அந்த திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.