இன்று முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு நடவடிக்கை!
ஒடிசா மாநிலத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி ஊழியர்களும், ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும் என மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் நடப்பு கல்வியாண்டில் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகள் பயன்பட்டால் தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அடுத்த கட்டமாக பள்ளிகள் திறப்பு குறித்தும் கலந்தாலோசித்து வருகிறது.
தமிழ்நாட்டில் ஜூலை 30 வரை ‘இந்த’ மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
அதன்படி ஒடிசா மாநிலத்தில் பள்ளிக் கல்வித்துறை பள்ளிகள் திறப்பு குறைத்து ஆலோசித்து முன்னறிவிப்புடன் இன்று முதல் பள்ளிகளை திறந்துள்ளது. முதற்கட்டமாக 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 10 மணி முதல் மதியம் 1.30 வரை நடைபெறும் எனவும், ஞாயிற்றுக் கிழமை மற்றும் மற்ற பொது விடுமுறைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும் மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும் மாணவர்கள் பெற்றோர்களின் அனுமதி கடிதத்துடன் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும . கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு உள்ளே இருக்கும் பள்ளிகளுக்கு தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தாத பள்ளி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த மாநில சுகாதார துறையிடம் கோரிக்கை வைத்துளோம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.