சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை – மாநில அரசு அறிவிப்பு!!
ஒடிசா மாநிலத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களுக்காக செயல்படும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஊக்கத்தொகை அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களுக்கு பாதுகாப்பாக முன் நின்று செயல்படும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் அனைவரும் வீரர்கள் தான். இந்த சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் குறிப்பிட்ட அளவு உதவித்தொகை வழங்குவதற்கு ஒடிசா மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் என அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. இது குறித்து ஒடிசா மாநில சுகாதாரத்துறை தெரிவிக்கையில், ‘கொரோனா தொற்றுக்கு எதிராக பணியாற்றி வரும் சுகாதார பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், ஊக்கத்தொகை வழங்குவது குறித்து தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் இரவு, வார இறுதி ஊரடங்கு ரத்து? உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்!
அந்த கூட்டத்தின் முடிவில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒடிசாவில் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் உட்பட அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்