தமிழகத்தில் அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இந்தியாவில் அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக வங்கித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
வங்கிகள் விடுமுறை:
இந்தியாவில் வங்கி சேவை என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. கடந்த மாதம் நிலவிய கொரோனா ஊரடங்கு காலத்திலும் வங்கிகள் மக்களின் தேவைக்காக பகுதி நேரமாக செயல்பட்டது. 50% வங்கி ஊழியர்கள் நோய் பரவும் அச்சத்திலும் பணி செய்தனர். தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அனைத்து மாநிலங்களிலும் அமலில் உள்ளது. இந்த நிலையில் வங்கிகள் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. தற்போது வங்கிகளுக்கு அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் விடுமுறை என்ற தகவல் பரவலாக பரவி வருகிறது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் முக்கிய உத்தரவு!
இந்த செய்தி குறித்து அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அதாவது நாடு முழுவதும் சில மாநிலங்களில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை விடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதே போல தமிழகத்தில் 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினங்களில் பொதுமக்களின் வசதிக்காக ஆன்லைன் சேவைகள் தொடரும். ஏடிஎம் மையங்களில் போதிய பணம் இருப்பு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் வங்கி விடுமுறை நாட்கள்:
- 02.10.2021 – காந்தி ஜெயந்தி
- 03.10.2021 – ஞாயிறு
- 09.10.2021 – 2வது சனிக்கிழமை
- 10.10.2021 – ஞாயிறு
- 14.10.2021 – ஆயுதபூஜை
- 15.10.2021 – விஜயதசமி
- 17.10.2021 – ஞாயிறு
- 19.10.2021 – மிலாடி நபி
- 23.10.2021 – 4வது சனிக்கிழமை
- 24.10.2021 – ஞாயிறு
- 31.10.2021 – ஞாயிறு