இந்தியாவில் அக். 1 ஆம் தேதி 5ஜி சேவை தொடக்கம் – பிரதமர் மோடி தலைமையில் விழா!
இந்தியாவில் வருகிற அக். 1 ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் மோடி தலைமையில் 5ஜி சேவை தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5ஜி சேவை அமல்படுத்தப்பட்டால் 4ஜியை விட 10 மடங்கு அதிக வேகத்தில் இணைய வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
5ஜி சேவை தொடக்கம்:
உலகளவில் கடந்த 20 ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சியானது அதிகளவில் இருந்து வருகிறது. மக்கள் பலர் ஆண்ட்ராய்டு மொபைல்களை பயன்படுத்த தொடங்கியது முதல் அனைத்து சேவைகளும் ஒரே கைக்குள் அடங்கிவிட்டது. இந்நிலையில் வருகிற அக். 1 ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கும் இந்தியா மொபைல் காங்கிரஸ் தொடக்க விழாவில் அரசு அதிகாரப்பூர்வமாக 5ஜி சேவையை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடக்கி வைக்க இருக்கிறார்.
5ஜி சேவை தொடங்கினால் தற்போது இருக்கும் 4ஜி சேவையை விட 10 மடங்கு அதிக இணைய வசதி கிடைக்கும். மேலும் 3ஜி யை விட 30 மடங்கு அதிக இணைய வசதி கிடைக்கும். 5ஜி சேவைக்கான ஏலம் முடிவடைந்துள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய 4 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் கலந்து கொண்டனர். மொத்தம் ரூ.1,50,173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலத்தை மத்திய அரசு எடுத்துள்ளது.
தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு – பதற்றத்தில் மக்கள்! தலைமைச் செயலாளர் ஆலோசனை!
Exams Daily Mobile App Download
மேலும் 5ஜி சேவையை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி ஆகஸ்டு 10 ஆம் தேதி நடைபெறும் என்றும், அக்டோபர் மாதத்தில் 5ஜி சேவைகள் தொடங்கும் எனவும் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாட்டில் 5ஜி சோதனை சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் 2023 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் எல்லா நகரங்களிலும் 5ஜி சேவை கொண்டுவரப்படும் என முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்