தமிழகத்தில் 1,400 க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு; இன்று மட்டும் 1,390 பேருக்கு தொற்று உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு தமிழகத்தில் 1,400 க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் தமிழகம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினசரி பாதிப்பு:
திடீரென்று கடந்த வாரத்தில் மொத்த நாட்டின் கொரோனா பதிப்பின் தினசரி விகிதம் சற்று அதிகரித்தது. இதேபோல், தமிழகத்திலும் பாதிப்புகள் 1,700 என்ற எண்ணிக்கையை கடந்து பதிவாகியது. மேலும், இந்த அக்டோபர் மற்றும் அடுத்து வரும் மாதங்களில் பல முக்கிய பண்டிகைகள் வர உள்ளது. இதனால் மேலும், பாதிப்பு அதிகரிக்கும் என்று அரசுகள் அச்சத்தில் இருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
போதைப்பொருள் வழக்கு – ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!
தமிழக சுகாதாரத்துறை இன்றைய பாதிப்பு நிலவரத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மட்டும் புதிதாக 1,390 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 26,74,233 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று மட்டும் 27 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் இதுவரை தொற்று பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,734 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1,487 பேர் தொற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அடுத்த 3 மாதங்கள் அதிக கவனம் தேவை – சுகாதார செயலர் எச்சரிக்கை!
மாநிலம் முழுவதும் இதுவரை குணடமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,21,986 ஆக உள்ளது. இன்றைய மாலை நேர நிலவரப்படி, தமிழகத்தில் 16,513 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று ஒரே நாளில் 173 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை சென்னையில் மொத்தம் 551110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 1,45,846 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4,80,36,604 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.