தமிழகத்தில் இன்று 1,432 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று மேலும் குறைந்துள்ளது. அரசு அறிக்கையின் படி இன்று மட்டும் புதிதாக 1,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக அக்டோபர் 31ம் தேதி வரை பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் முன்னதாக அதிகரித்து வந்த கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது.
முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் முடக்கம்? – நிறுவனத்தின் விளக்கம்!
தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மட்டும் புதிதாக 1,432 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 26,72,843 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 25 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 35,707 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் 1,44,832 தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழக அஞ்சலகங்களில் இனி படிவங்கள் தமிழில் இருக்கும் – எம்.பி. சு.வெங்கடேசன் பெருமிதம்!
இதுவரை தொற்று பரிசோதனை செய்யப்பட்ட எண்ணிக்கை 4,69,78,922 ஆக உள்ளது. இன்று மட்டும் 1,519 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 26,20,499 ஆக உள்ளது. சென்னையில் இன்று 176 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 16,637 ஆக உள்ளது.