அக்.6 முதல் 17ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – தசரா பண்டிகை எதிரொலி!
அக்டோபர் மாதத்தில் அடுத்து வரவிருக்கும் நாட்களில் நாடு முழுவதும் தசரா பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் தெலுங்கானாவில் இன்று (அக்.6) முதல் 17ம் தேதி வரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்
நாடு முழுவதும் தற்போது கொரோனா 2ம் அலை தொற்று ஓய்ந்திருக்க கூடிய சூழலில் தற்போது தான் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தெலுங்கானாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளது. இந்நிலையில் பண்டிகை காலமான இம்மாதத்தில் நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.
கம்ப்யூட்டரில் Windows 11 சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
அதனால் தசரா பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள உத்தரவின் படி, பள்ளிகள் அனைத்தும் அக்டோபர் 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை அதாவது 12 நாட்கள் வரை மூடப்பட்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சூப்பர் ஆபர்கள்! Festive Treats 3.0!
தொடர்ந்து தசரா விடுமுறை முடிந்ததும் அக்டோபர் 18ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில், தசரா பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானா மாநிலத்தின் இடைக்கல்லூரிகள் அனைத்தும் அக்டோபர் 13ம் தேதி முதல் அக்.16ம் தேதி வரை மூடப்படும். இந்த கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் அக்டோபர் 17 முதல் மீண்டும் துவங்கும் எனவும் அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.