தமிழகத்தில் அக்.25 பள்ளிகளுக்கு விடுமுறை? – அரசின் முடிவு!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், அக்டோபர் 25ம் தேதி விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தீபாவளி விடுமுறை:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு அக்டோபர் 1ம் தேதி முதல் பருவ தேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறைகள் அளிக்கப்பட்டது. தனியார் பள்ளிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி முதலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் மாணவர்களுக்கு அக்டோபர் 10ம் தேதி முதலும், 1 முதல் 5ம் வகுப்பு ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 13ம் தேதி முதலும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
பள்ளிகள் திறந்த பிறகு கனமழை காரணமாக பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இடையில் விடுமுறை அளிக்கப்பட்டது. எதிர்பாராத இந்த விடுமுறைகளுக்கு பதிலாக வேறு நாளில் பள்ளிகள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வரும் திங்கட்கிழமை அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கு பலரும் சொந்த ஊர்களுக்கு பயணிப்பது வழக்கம். இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளுக்கு தீபாவளி பண்டிகைக்கான விடுமுறை குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – உங்களுக்கான Free Online Test!!
Exams Daily Mobile App Download
சனி மற்றும் ஞாயிற்று கிழமை பள்ளிகளுக்கு வழக்கம் போல் விடுமுறை, திங்கட்கிழமை தீபாவளி அன்று அரசு விடுமுறை, இதை தவிர சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் பண்டிகை முடிந்து அடுத்த நாள் தான் மீண்டும் தங்களது வீட்டிற்கு திரும்புவார்கள், இதனால் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான அக்டோபர் 25ம் தேதி அன்றும் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், பள்ளிகளுக்கு அக் 25ம் தேதி விடுமுறை அளிப்பது குறித்து தமிழக முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார் என கூறியுள்ளார்.