தமிழகத்தில் இன்று (அக்.17) பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!
தமிழகத்தில் கடந்த வாரம் முதல் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக இன்று (அக். 17) ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாகவே பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதிகளில் உள்ள பர்கூர் மலைப் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதனால் அந்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக். 17) விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உன்னி வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம் – முதல்வர் வலியுறுத்தல்!
Exams Daily Mobile App Download
மேலும் வானிலை ஆய்வு மையம் அறிக்கையின் படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்