தமிழகத்தில் அக்.15 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.. முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னையில் வரும் அக்.15ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வேலைவாய்ப்புடன் சேர்த்து திறன் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. அதனால் இளைஞர்கள் மற்றும் வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் தனியார் துறைகள் மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் பொருட்டு அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு மையங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அனைத்து மாவட்டங்களிலும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் நோக்கில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை இராயப்பேட்டையில் உள்ள தி நியூ கல்லூரியில் வரும் அக்டோபர் 15ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தவுள்ளனர். இம்முகாமில் 50,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்? முதல்வரிடம் வலுக்கும் கோரிக்கை!!
Exams Daily Mobile App Download
இதில் 8 ஆம் வகுப்பு படித்தவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள், நர்ஸிங், பார்மஸி, பொறியியல் பட்டம் பெற்றவர்கள் பங்கேற்று வேலைவாய்ப்பை பெறலாம். மேலும் முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுயவிவரக் குறிப்புகளை கொண்டு வர வேண்டும். இந்த முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் இலவச திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்