தமிழகத்தில் இன்று மட்டும் 1,280 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பின் அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மட்டும் புதிதாக 1,280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் சமீபத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் சீராக குறைந்து வருகிறது. இது முன்னேற்றத்தின் நல்ல அறிகுறியாக உள்ளது. இதனால் தமிழகத்தில் மேலும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். அது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்றைய பாதிப்பு அறிக்கையினை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி புதிதாக, மேலும் 1,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நேரத்திற்கு முன்பாக திட்டங்களை முடிக்க நடவடிக்கை – பிரதமர் மோடி பெருமிதம்!
இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 26,82,137 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 19 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 35,833 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,453 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 26,30,654 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நீட் விலக்கு மசோதா விவகாரம் – முதல்வர் ஆளுநருடன் சந்திப்பு?
மாலை 7 மணி நிலவரப்படி தமிழகத்தில் 15,650 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,38,772 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4,88,80,069 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 173 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.