தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக். 10) விடுமுறை – கனமழை எதிரொலி! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், இன்று (அக். 10) கனமழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
விடுமுறை அறிவிப்பு:
தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்காமல் இருக்கிறது. இருந்தாலும் தென் மேற்கு வங்கக் கடலில், இலங்கையை ஒட்டிய பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் கனமழை வருகிற அக். 13 ஆம் தேதி வரை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் காலாண்டு தேர்வுகள் முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், கனமழை காரணமாக புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (10.10.2022) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்க நகை வாங்க இதுவே சரியான தருணம் – இன்றைய விலை நிலவரம் என்ன? விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
மேலும் நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று பிற்பகல் வரை கனமழை பெய்யும் எனவும், கோவை,ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், கரூர், மதுரை, தேனி,தென்காசி, புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை, திருச்சி, திருவாரூர், அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, திருப்பத்துார், கடலுார், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்