தமிழக கோயில் திருவிழாக்களில் அரங்கேறும் ஆபாச ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் – உயர்நீதிமன்றம் காட்டம்!

0
தமிழக கோயில் திருவிழாக்களில் அரங்கேறும் ஆபாச ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் - உயர்நீதிமன்றம் காட்டம்!
தமிழக கோயில் திருவிழாக்களில் அரங்கேறும் ஆபாச ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் - உயர்நீதிமன்றம் காட்டம்!
தமிழக கோயில் திருவிழாக்களில் அரங்கேறும் ஆபாச ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் – உயர்நீதிமன்றம் காட்டம்!

தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில் தேவையற்ற ஆபாசமான பாடல்கள் மற்றும் நடனம் இடம்பெறுவதாக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நீதிபதிகள் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

கலை நிகழ்ச்சிகள்:

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் குறிப்பிட்ட மாதங்களில் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அவ்வாறு திருவிழாவில் தெய்வ வழிபாட்டிற்கான அனைத்து சடங்குகளும் தினசரி ஒவ்வொன்றாக நடத்தப்படும். அதன் நிறைவு விழாவில் பொதுமக்களை மகிழ்விப்பதற்காக ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் பல காலமாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், நாளடைவில் அந்த நிகழ்ச்சிகளில் ஆபாசம் நிறைந்த பாடல்கள் மற்றும் நடனம் போன்றவை இடம் பெற்றது.

இதனால், பல சமூக நல ஆர்வலர்கள் கோயில்களில் இது போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவ்வாறு, முன்னதாக வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக, மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனால், கோயில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், கடந்த வாரத்தில் ஒருவர் கோயில் திருவிழாக்களில் முறையாக ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் ஆன்மீக பாடல்களுடன் மட்டும் நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதி மன்ற மதுரை கிளையில் அனுமதி பெற்றார்.

தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் செயல்திறன் மதிப்பீடு அறிக்கை – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

Exams Daily Mobile App Download

ஆனால், தற்போது மீண்டும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. அதில், அரை குறை ஆடைகளுடன் நடன நிகழ்ச்சி மற்றும் ஆபாச பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக வீடியோ ஆதாரத்துடன் மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், நீதிமன்ற தடையை மீறி இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம், குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் சினிமா பாடல்களுக்கு ஆடவும், சினிமா பாடல்களை பாடவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி எஸ்.பி., ஆட்சியர் ஆகியோர், கோயிலில் ஆன்மீக பாடல்கள் மட்டுமே ஒலிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!