தமிழக மாணவர்களுக்கான ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் – பள்ளிக்கல்விதுறை முக்கிய தகவல்!
தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த எண்ணும் எழுத்தும் என்கிற திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், இந்த திட்டம் குறித்தான முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
எண்ணும் எழுத்தும்:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுமே கொரோனா பரவலின் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. இதனால், மாணவர்களின் கல்வித்திறன் மிகவும் பாதிப்படைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அடிப்படை எழுத்துகள் கூட தெரியவில்லை. இதனால், மாணவர்களிடையே கல்வித்திறனை மேம்படுத்தும் நோக்கில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடத்திட்டங்களுக்கு பயிற்சியளிக்க முடிவெடுக்கப்பட்டது.
TNPSC அரசு பணிகளுக்கான நியமன ஆணை – முதல்வர் வழங்கல்!
அதன்படி, தமிழக அரசின் சார்பில் எண்ணும் எழுத்தும் என்கிற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள குழந்தைகளின் விவரங்களை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பதிவு செய்யும்படி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, FA(b) Module 1 க்கு வெள்ளிக்கிழமை கற்றல் திறன் வகுப்பிற்கு வருகை தராத மாணவர்களுக்கு இன்று முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல Module 1 க்கு வரும் வெள்ளிக்கிழமை செய்து முடித்துவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளிக்கிழமை வகுப்பு ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லையெனில் பொறுப்பு ஆசிரியர் அந்த பணியினை முடிக்க வேண்டும் எனவும், FA(b) Module முடிக்கும் போது மாணவர் பள்ளிக்கு வரவில்லையெனில் மட்டும் வாரநாட்களில் அந்த பணியினை ஆசிரியர்கள் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், FA(B) Module 1க்கான மதிப்பீடு இன்று அனுப்பப்படும் எனவும், Module 2 க்கான பணியினை வெள்ளிக்கிழமை செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.