தமிழக அரசு பள்ளிகளில் எண்ணும் & எழுத்தும் திட்டம் – கல்வி இயக்குனர் வெளியிட்ட செயல்முறைகள்!
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இத்திட்டம் தொடர்பாக பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எண்ணும் & எழுத்தும் திட்டம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கிடையே கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 2020ம் ஆண்டு 1ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் கொரோனா விடுமுறை காரணமாக 2ம் வகுப்பு படிக்காமலேயே நேரடியாக 3ம் வகுப்பு பயின்று வருகின்றனர். இதனால் குழந்தைகளிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை பள்ளிகள் சரி செய்வதற்காக தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் “எண்ணும் எழுத்தும் திட்டம்” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இத்திட்டம், தமிழகத்தில் 2025 ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைவரும் எண்ணறிவும் எழுத்தறிவும் பெற வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இத்திட்டத்தின்படி தமிழகத்தில் தொடக்கக்கல்வி பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை வழங்கியுள்ளார். இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காலை வணக்கத்துடன் தொடங்கிய பிறகு மதிய உணவு இடைவேளைக்கு பிறகு செய்ய வேண்டிய செயல்முறைகளை பற்றி கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு சிறப்பு அனுமதி – மத்திய அரசு அறிவிப்பு
இதில் வாய்ப்பாடு ஒப்புவித்தல், சொல்வது எழுதுதல், கலை மற்றும் கைவண்ணம், விளையாட்டு, கதை மற்றும் பாடல்கள் உள்ளிட்ட செயல்முறைகள் இடம்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களிடமுள்ள தனித்திறமைகளை வெளி கொணர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி இவர்களுக்கு நாடகம், தனி நடிப்பு, நூலகம், செய்தித்தாள் வாசிப்பு, உடற்கல்வி, நடனம், இலக்கியமன்ற செயல்பாடுகள் உள்ளிட்ட செய்ல்பாடுகள் கொடுக்கப்பட வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.