NTPC நிறுவனத்தில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!
தேசிய அனல் மின் கழகம் (NTPC) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Executive பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Executive பணிக்கென்ன மொத்தமாக 15 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BE / B.Tech/ ME / M.Tech / Post Graduation Diploma / Degree / MCA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- General / EWS / OBC பிரிவினை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 13.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.