NTPC நிறுவனத்தில் மாதம் ரூ.1,50,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !
Executive (Hospital Administration) மற்றும் Executive (Civil) மற்றும் Executive (Architecture) பணியிடங்களை நிரப்ப தேசிய அனல் மின் கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 12 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணி குறித்த அனைத்து தகவல்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் விண்ணப்பதார்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
NTPC நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
Executive (Hospital Administration) பணிக்கு 10 பணியிடம், Executive (Civil) பணிக்கு 1 பணியிடம் மற்றும் Executive (Architecture) பணிக்கு 1 பணியிடம் என மொத்தமாக 12 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. Executive (Hospital Administration) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் B.Sc / B.Pharma / BAMS / BHMS / BDS / Post Graduation Diploma / Degree / MBBS ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமாகும். விண்ணப்பதாரர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமாகும்.
Exams Daily Mobile App Download
Executive (Civil) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Civil Engineering பாடப்பிரிவில் BE / B.Tech ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமாகும். Executive (Architecture) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Bachelor of Architecture தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அனுபவம் இருக்க வேண்டும்.
Executive (Hospital Administration) பணிக்கு அதிகபட்ச வயதாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Executive (Civil) மற்றும் Executive (Architecture) பணிக்கு அதிகபட்ச வயதாக 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். Executive (Hospital Administration) பணிக்கு ரூ.1,00,000/- மாத ஊதியம் மற்றும் Executive (Civil) & Executive (Architecture) பணிக்கு ரூ.1,50,000/- மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதார்கள் இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.