என்.டி.பி.சி நிறுவனத்தில் பெண்களுக்கான ஆட்சேர்ப்பு இயக்கம் – மகளிர் தின சிறப்பு ஏற்பாடுகள்!!
என்.டி.பி.சி நிறுவனம்:
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மத்திய அரசின் சார்பில் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். மின்சாரம் மற்றும் அதனை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும். என்.டி.பி.சி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் புது டெல்லியில் உள்ளது.
தேசிய தகுதித்தேர்வு (NET) விண்ணப்ப பதிவு – நாளை (மார்ச் 9) இறுதி நாள்!!
என்.டி.பி.சி நிறுவனம் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அரசு நிர்வாகிகளுக்கான சிறப்பு ஆட்சேர்ப்பு இயக்கத்தை அறிவித்துள்ளது. இது தொடர்பாக என்.டி.பி.சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “மகளிர் தினத்தன்று இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின் நிறுவனமான என்.டி.பி.சி லிமிடெட், அதன் செயல்பாடுகளில் பெண் நிர்வாகிகளை மட்டும் சிறப்பு ஆட்சேர்ப்பு இயக்கமாக நியமிக்கும் திட்டங்களை அறிவிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
என்.டி.பி.சி நிறுவனம் அதிகமான பெண் விண்ணப்பதாரர்களை ஈர்க்க பல புதுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் படி, ஆட்சேர்ப்பு இயக்கத்தில் பெண் ஊழியர்களுக்கு முற்றிலும் விண்ணப்பக் கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளது. பெண் ஊழியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு குழந்தை பராமரிப்பு விடுப்பு ஊதியம், மகப்பேறு விடுப்பு, சிறப்பு குழந்தை பராமரிப்பு விடுப்பு போன்ற சலுகைகளை என்.டி.பி.சி நிறுவனம் கடைபிடிக்கிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்