தேசிய தேர்வு முகமையில் காலியிடங்கள் – விண்ணப்பிக்க மார்ச் 16 வரை அவகாசம் நீட்டிப்பு!!
தேசிய தேர்வு முகமையில் பல்வேறு காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிப்புகள் முன்னதாக வெளிவந்த நிலையில் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 16ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமை:
தேசிய தேர்வு முகமையானது இந்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு நிறுவப்பட்டதாகும். இந்தியாவில் உள்ள தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மை கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வுகளை நடத்தும் பணிகளை மேற்கொள்கிறது.
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ. ஒரு லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!!
காலிப்பணி இடங்கள்:
என்டிஏ.,வில் காலிப்பணி இடங்கள் உள்ளதாகவும், பிரதிநிதித்துவம், குறுகிய கால ஒப்பந்தம், 3 ஆண்டு கால ஒப்பந்தம் ஆகிய அடிப்படையில் பணியாளர்களை நிரப்ப இருப்பதாக கடந்த ஜனவரி 20ம் தேதி அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் குரூப் ஏ பிரிவில் 18ம், குரூப் பி பிரிவில் 24ம், குரூப் சி பிரிவில் 16 என மொத்தம் 58 காலிப்பணி இடங்கள் உள்ளது.
விண்ணப்பம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க முதல் கட்டமாக பிப்ரவரி 18ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் மார்ச் 5ம் தேதி வரை இதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. மேலும், மார்ச் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ நீட்டித்துள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை தேசிய தேர்வு முகமையின் அதிகாரபூர்வ இணையதளமான www.nta.ac.in ல் சென்று அறிந்து கொள்ளலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்