தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு நிறுவனத்தில் Young Professional – II பதவிக்கு என்று காலிப்பணியிடம் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதனால் தகுதியானவர்கள் 17.02.2022ம் தேதிக்கு முன்னாள் விண்ணப்பிக்கவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | National Research Centre for Banana (NRCB) |
பணியின் பெயர் | Young Professional – II |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NRCB காலிப்பணியிடம்:
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் Young Professional – II பதவிக்கு என்று மொத்தமாகவே ஒரே ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கியுள்ளது.
NRCB கல்வித் தகுதி:
இந்த மத்திய அரசு பணிக்கு பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய Computer Science / Computer Applications பாடப்பிரிவில் M.Tech / M.Sc போன்ற Masters Degree முடித்திருக்க வேண்டும்.
NRCB முன் அனுபவம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Python programming, android studio, MATLAB, Cloud function, APP development and website creation போன்றவற்றில் பணி புரிந்தவராக இருக்க வேண்டும்.
NRCB வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருப்பது அவசியமாகும்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
NRCB ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்பட்ட பணியில் அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.35,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
NRCB தேர்வு முறை:
நேர்காணல் (Interview)
NRCB விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.