மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் தமிழகத்தில் அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB) சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த மத்திய அரசு நிறுவனத்தில் Young Professional – II பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 17.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் Young Professional – II பதவிக்கு என்று மொத்தமாக ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- இந்த மத்திய அரசு பணிக்கு பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய Computer Science / Computer Applications பாடப்பிரிவில் M.Tech / M.Sc போன்ற Masters Degree முடித்திருக்க வேண்டும்.
TNPSC Coaching Center Join Now
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Python programming, android studio, MATLAB, Cloud function, APP development and website creation போன்றவற்றில் பணி புரிந்தவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருப்பது அவசியமாகும்.
- தேர்வு செய்யப்பட்ட பணியில் அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.35,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NRCB விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 17.02.2022 ம் தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.