ரூ.25,000 சம்பளத்தில் திருச்சியில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Young Professional – I பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. M.Sc. (Biotechnology / Bioinformatics) துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சி |
பணியின் பெயர் | Young Professional – I |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 22.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை |
தேசிய வாழை ஆராய்ச்சி மைய காலிப்பணியிடங்கள்:
Young Professional – I பதவிக்கு திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
Young Professional பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விதிகளின் படி பதவிக்கு வயது தளர்வு பொருந்தும்.
கல்வி தகுதி:
தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் M.Sc. (Biotechnology / Bioinformatics) முடித்திருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
Young Professional – I – ரூ.25,000
தேர்வு செயல் முறை:
தேவையான தகுதிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணல் நடைபெறும் தேதி பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான ஆர்வமுள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை கல்வித் தகுதி / அனுபவ சான்றிதழ்கள் போன்றவற்றின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் 22.03.2021 க்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Oru kudumbam one month sapda kooda aagathu intha salary