NPCIL நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
இந்திய அணுசக்தி கழகம் (NPCIL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Trade Apprentice பணிக்கு என மொத்தமாக 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. நாளை (16.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.
NPCIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள Trade Apprentices என்னும் Fitter பணிக்கு 25 பணியிடங்களும், Electrician பணிக்கு 13 பணியிடங்களும், Electronic Mechanics பணிக்கு 12 பணியிடங்களும் என மொத்தமாக 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேற்கண்ட பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Fitter, Electrician, Electronic Mechanics ஆகிய பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 16.06.2022 அன்றைய தேதியின் படி, குறைந்தபட்சம் 14 வயது முதல் அதிகபட்சம் 24 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். மேலும் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். Trade Apprentices பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,855/- வரை மாத ஊக்கத்தொகையாக பெறுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – இன்றே விண்ணப்பிக்கவும்..!
இந்த NPCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
NPCIL Notification & Application Link