பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – நாளை விண்ணப்பிக்க இறுதி நாள்..!
இந்திய அணுசக்தி கழகம் (NPCIL) ஆனது கடந்த சில நாட்களுக்கு முன் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Instrument Mechanic பணிக்கு என மொத்தமாக 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை (30.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு பற்றிய விவரங்கள் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
NPCIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Instrument Mechanic பணிக்கு என 20 பணியிடங்கள் இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ளது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
- இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Instrument Mechanic பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.8,850/- முதல் ரூ.8,855/- வரை மாத ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.
Exams Daily Mobile App Download
- Instrument Mechanic பணிக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
NPCIL விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். நாளை (30.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.