இனி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லையாக களமிறங்கும் பிரபல நடிகை – வெளியான தகவல்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முக்கியமான கதாபாத்திரமான முல்லையாக நடித்து வந்த நடிகை காவ்யா அறிவுமணி சீரியலை விட்டு விலகிய நிலையில், அவருக்கு பதிலாக களமிறங்க இருக்கும் நடிகை குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
தமிழ் சின்னத்திரையில் பல வெற்றி சீரியல்களை கொடுத்த விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வருவது தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் தொடக்கத்தில் முல்லை கதாபாத்திரத்தில் நடிகை விஜே சித்ரா நடித்து வந்தார். சீரியல் தொடக்கத்தில் கதிர் முல்லை ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். ஆனால் விஜே சித்ரா மறைவிற்கு பின் முல்லையாக யார் வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.
அப்போது பாரதி கண்ணம்மா சீரியலில் சிறிய ரோலில் நடித்த காவ்யா அறிவுமணிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே, விஜே சித்ரா இடத்தை பிடித்தார் காவ்யா. தொடக்கத்தில் அதனை ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள், அதன் பின் முல்லையாக காவ்யாவை பார்க்க தொடங்கினார். தற்போது 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், முல்லையாக காவ்யா நடித்து வந்தார். இந்நிலையில் நேற்றைய எபிசோட் உடன் காவ்யா சீரியலை விட்டு விலகியதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
அதை பார்த்து ரசிகர்கள் ஷாக்கானாலும், அடுத்து முல்லையாக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டு தற்போது முடிந்துள்ள சிப்பிக்குள் முத்து சீரியலில் கதாநாயகியாக களமிறங்கிய நடிகை லாவண்யா, இனி முல்லையாக வருவார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி மகா சங்கமம் நடந்து வரும் நிலையில், இந்த எபிசோடுகளுக்கு பின் முல்லையாக நடிகை லாவண்யா நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.