இனி மக்களின் குறைகளுக்கு 30 நாட்களில் தீர்வு – மத்திய அரசு முடிவு!

0
இனி மக்களின் குறைகளுக்கு 30 நாட்களில் தீர்வு - மத்திய அரசு முடிவு!
இனி மக்களின் குறைகளுக்கு 30 நாட்களில் தீர்வு - மத்திய அரசு முடிவு!
இனி மக்களின் குறைகளுக்கு 30 நாட்களில் தீர்வு – மத்திய அரசு முடிவு!

பொதுமக்களின் புகார்களுக்கு 30 நாளில் தீர்வு காணப்பட வேண்டும், இல்லையெனில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து நிர்வாக சீர்திருத்த துறை மற்றும் மக்கள் குறை தீர்க்கும் துறைக்கு மத்திய அரசு சில உத்தரவுகளை தெரிவித்துள்ளது.

மக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு மையம் :

இந்திய குடிமக்களின் குரல் கேட்கப்படவேண்டும் என்ற நோக்கத்திலும், அவர்களுக்கு அரசின் மீது உள்ள நம்பிக்கையை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற நல் எண்ணத்திலும் மத்திய அரசு ‘மக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு மையம்’ என்ற இணையதளத்தை நடத்தி வருகிறது. இதில் குடிமக்களுக்கு அரசுத்துறைகளின் செயல்களில் மாற்றம் வேண்டும் என்றோ அல்லது அவர்களுக்கு எதிராக புகார்கள் கொடுக்க வேண்டும் என்றோ நினைத்தால் மேற்குறிப்பிட்டுள்ள இணையத்தளம் வாயிலாக பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

Exams Daily Mobile App Download

இந்த முறையை பயன்படுத்தி நடப்பு ஆண்டில் இதுவரை 13 லட்சத்து 32 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில், 4 லட்சத்து 18 ஆயிரம் மனுக்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நிர்வாக சீர்திருத்த துறை மற்றும் மக்கள் குறைகள் தீர்க்கும் துறை சில மாற்றங்களை கொண்டு வந்திருப்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது இந்நாள் வரை பெறப்பட்டுள்ள மக்களின் புகார் மனுக்களை ஒவ்வொன்றாக சீர்திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, மக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு தீர்வு காணும் நேரத்தை 45 நாட்களில் இருந்து 30 நாட்களாக கணிசமாகக் குறைத்துள்ளது என்றும், அதனால் ‘குறை தீர்க்கும் குறியீட்டில்’ முன்னேற்றம் காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு

ஒருவேளை, கோர்ட்டு வழக்கு அல்லது கொள்கை முடிவு காரணமாக 30 நாட்களுக்குள் தீர்வு காண முடியாவிட்டால், பொதுமக்களுக்கு இடைக்கால பதில் ஒன்றை அளிக்க வேண்டும். மேலும், புகார்கள் மீது அளிக்கப்படும் தீர்வில் பொதுமக்களுக்கு திருப்தி இல்லாவிட்டால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு. அந்த மேல்முறையீடு வராத பட்சத்தில் தான், சம்பந்தப்பட்ட புகார் முடிவடைந்து விட்டதாக கருதப்பட வேண்டும். தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்படும் புகார்களும் தீர்வு காணப்பட்ட பிறகுதான் முடிவடைந்தது என்று கருதப்பட வேண்டும். அதன் பிறகு பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்.

மக்களின் கருத்துக்களை தெரிவிப்பதற்கும் அரசின் கால் சென்டர்கள் நிறுவப்பட்டுள்ளது. அவர்கள் மக்களின் கருத்துக்களை சம்பந்தப்பட்ட அமைச்சகத்துடன் பகிர்ந்து கொண்டு, அதன் செயல்பாட்டை மேம்படுத்தலாம். மேலும், புகார்களின் எண்ணிக்கையை பொறுத்து, அதிகமான அதிகாரிகள் நியமிக்கப்படலாம் எனவும், அவ்வாறு நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு எந்த பிரச்சனைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற முடிவை எடுக்கும் உரிமையும் கொடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!