இனி ஸ்மார்ட் போன்களில் “இது” கட்டாயம்.. ஷாக்கான மொபைல் நிறுவனங்கள் – இந்திய அரசின் புதிய உத்தரவு!
மக்கள் பலர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த தொடங்கி இருக்கும் நிலையில், இனி அறிமுகம் செய்யப்படும் போன்களில் “இது” கட்டாயம் இருக்க வேண்டும் என இந்திய அரசாங்கத்தின் ஒரு புதிய உத்தரவு வெளியாகி இருக்கிறது.
அரசு உத்தரவு:
ஸ்மார்ட் போன் பயனாளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற் போல பல புதிய மாடல் போன்கள் மாதந்தோறும் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. சாம்சங், சியோமி மற்றும் ஆப்பிள் என பல போன் நிறுவனங்கள் மாதம் மாதம் ஒரு போனை அறிமுகம் செய்து வருகின்றது. அந்த வகையில் இனி புதிதாக அறிமுகம் செய்யப்படும் போன்களில் இந்த வசதி கட்டாயம் இருக்க வேண்டும் என இந்திய அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
அதில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவால் (ISRO) உருவாக்கப்பட்ட சுயாதீனமான நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டமான நேவிக் (NavIC) அல்லது நேவிகேஷன் வித் இந்தியன் கான்ஸ்டெல்லேஷன், பொதுவாக வாகன கண்காணிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு Terrestrial Network Connectivity இல்லாத இடங்களில் அவசர எச்சரிக்கைகளை வழங்க மற்றும் இயற்கை பேரழிவுகள் குறித்த தகவல் அளிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
RRB Group D தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இதன் பயனை அதிகரிக்க வருகிற 2023 ஆம் ஆண்டு முதல் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் நேவிக் சேவை கட்டாயம் இருக்க வேண்டும் என ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மாற்றத்தை கொண்டு வர ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு அதிக செலவு ஏற்படும் என்பதால் பல முன்னணி போன் நிறுவனங்கள் இந்த உத்தரவால் அதிர்ச்சியில் இருக்கின்றனர். மேலும் தற்போது NavIC-இன் கீழ் எட்டு செயற்கைக்கோள்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்ககும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்