தமிழகத்தில் நவம்பர் 30ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துணை நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை ஏற்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் அனைத்து துறைகளிலும் முழு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் மின்சார துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. தற்போது தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் புகார் மையம் மூலம் மின் தொடர்பான குறைகள் 2 நாட்களில் சரி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களிலும் தவறாது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, சர்க்கரை விநியோகம் – ஏற்பாடுகள் தீவிரம்!
பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் மூலம் மக்களுக்கு பாதுகாப்பான தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது.மின் பராமரிப்பு பணிகளின் போது மின் மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக பராமரிப்பு பணிகள் முடிவுபெறும் வரை மின் தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர் மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை (30.11.2021) விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துணை நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு – மத்திய அரசு விளக்கம்!
அதனால் பி.எஸ்.கே நகர், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, ஐ.என்டி.யூ.சி நகர், புதிய பஸ் நிலையம், பாரதி நகர், ஆர்.ஆர் நகர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்காபுரம், கலங்காப்பேரி, புதூர், மொட்டைமலை, வ.உ.சி நகர், பி.ஆர்.ஆர் நகர், பொன்னகரம், எம்.ஆர்.நகர், லட்சுமியாபுரம், ராம்கோ நகர் ஆகிய பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நவ30ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.