மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு? நவ.24ம் தேதியன்று அரசு ஆலோசனை!
டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பது தொடர்பாக வரும் 24ம் தேதியன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் கொரோனா பேரலை தொற்று கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் டெல்லியில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்பட்டது. அந்த வகையில் கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தீராத பிரச்சனையாக மாறி இருப்பதால் மீண்டுமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
ஆதார் எண்ணை பயன்படுத்தி BHIM மூலம் பணம் அனுப்பலாம் – எளிய வழிமுறைகள் இதோ!
இப்போது டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதைக் கருத்தில் கொண்டு வரும் நவம்பர் 24ம் தேதியன்று பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பது குறித்த முடிவை டெல்லி அரசு மறு ஆய்வு செய்யும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இன்று (நவ.22) தெரிவித்திருக்கிறார். இதனுடன் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்த முடிவை தவிர, வீட்டிலிருந்து நடந்து வரும் பணி (WHF) வசதிகள் குறித்தும் இந்த ஆய்வுக் கூட்டம் முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – மொபைல் போன் தொலைந்த பின்னும் மெசேஜ்களை எடுப்பது எப்படி?
இதற்கிடையில் மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பிற கல்வி நிறுவனங்களை மூடுமாறு கடந்த 14ம் தேதியன்று டெல்லி கல்வித்துறை அறிவித்தது. இருப்பினும், இம்மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே கற்பித்தல் பணிகளும், போர்டு வகுப்புகளுக்கான தேர்வுகளும் முன்பு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படியே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.