நவ.19ம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு பொது விடுமுறை அறிவிப்பு – மாநில முதல்வர் உத்தரவு!
கார்த்திக் பூர்ணிமாவை முன்னிட்டு வருகிற நவம்பர் 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதுமட்டுமின்றி விழாவிற்கான உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பொது விடுமுறை:
உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் கார்த்திக் பூர்ணிமாவினை ஒட்டி நவம்பர் 19ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்து உள்ளார். இந்த விழா கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்பதால், கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதற்கான அனுமதியைப் பெறுவதில் மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 14 ஆம் தேதி அயோத்தியில் தொடங்கும் ‘பஞ்ச்கோசி’ மற்றும் ‘சௌதா கோசி பரிக்ரமா’ முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.3000 வரை பென்ஷன் – சூப்பர் திட்டம்!
சத் மஹாபர்வ் உட்பட கார்த்திகை மாத திருவிழாக்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இதுபோன்ற சூழ்நிலையில் சுகாதாரம், பாதுகாப்பு, விளக்குகள், வாகன நிறுத்தம், குடிநீர் ஆகியவற்றுக்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஹபூரில் கர்முக்தேஷ்வர் கண்காட்சியும், நவம்பர் 19 ஆம் தேதி வாரணாசியில் தேவ் தீபாவளியும், பாலியாவில் தாத்ரி கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்படும். இதேபோல் எட்டா, பரேலி, கான்பூர் மற்றும் ரேபரேலியில் பல்வேறு கண்காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன என அரசின் செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.
நவம்பர் 15 முதல் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – முதல்வர் உத்தரவு!
கொரோனா நோய்த்தொற்று பரவல் சற்று குறைந்து உள்ள நிலையில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டு இருந்த மத வழிபாட்டு தலங்கள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.