தமிழகத்தில் நாளை (நவம்பர் 16) உள்ளூர் விடுமுறை – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 16 ஆம் தேதி அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நவம்பர் 16 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை:
திருவிழா போன்றவை நடக்கும் போது தமிழகம் முழுவதும் இல்லாமல், குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தற்போது தமிழகத்தில் நவம்பர் 16 ஆம் தேதி, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஆட்சியர் உள்ளூர் விடுமுறையை அறிவித்து உள்ளார்.
SSC தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
Exams Daily Mobile App Download
ஐப்பசி மாத துலா உற்சவத்தில் கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வரும் 19ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொது மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.