நவ.16 தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தின் சிறப்புமிக்க ஒரு மாவட்டத்தில் கொண்டாடப்படும் திருவிழா காரணமாக நவம்பர் 16ம் தேதியை உள்ளூர் விடுமுறை தினமாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகம் முழுவதும் இல்லாமல், குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைமுறைகள் மற்றும் திருவிழாக்களுக்கு என்று மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில், ஐப்பசி மாத துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் கோலாகலமாக ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
நவம்பர் 8: இந்த வருடத்தின் கடைசி சந்திர கிரகணம் – இந்தியாவில் எங்கு, எப்போது தெரியும்?
Exams Daily Mobile App Download
Follow our Instagram for more Latest Updates
நடப்பு ஆண்டிற்கான விழா அக்டோபர் மாதம் தொடங்கியது, தொடர்ந்து 30 நாட்கள் இதற்கான வழிபாடுகள் மற்றும் நடைமுறைகள் நடைபெற்று வரும். இதற்காக காவிரியில் பக்தர்கள் அனைவரும் நீராடி வழிபடும் கடைமுக தீர்த்தவாரி வரும் நவம்பர் 16ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்பட உள்ளது. அதிக அளவிலான பக்தர்கள் வருகை இருக்கும் என்பதால், நவம்பர் 16ம் தேதி அன்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில், நவம்பர் 19ம் தேதி (சனிக்கிழமை ) அன்று வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.