நவம்பர் 16 விடுமுறை.. 30 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் – டெல்லி செவிலியர் சங்கம் அறிவிப்பு!
நாட்டின் தலைநகரான டெல்லியில், வரும் நவம்பர் 16ம் தேதி மருத்துவ துறை செவிலியர்கள் அனைவரும் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தி கோரிக்கை வைத்து பொது விடுமுறை எடுக்க உள்ளனர்.
கோரிக்கை:
மக்களின் நல்வாழ்விற்கு உறுதுணையாக இருக்கும் மருத்துவ துறை பணியாளர்களுக்கான கோரிக்கைகளை அரசு எப்போதும் உடனடியாக நிறைவேற்றி விடும். இருப்பினும், சில தவிர்க்க முடியாத காரணங்களினால் கோரிக்கைகள் நிறைவேற்ற சிறிது தாமதம் ஆனாலும் ஊழியர்கள் சார்பில் போராட்டத்தை கையில் எடுத்து விடுகின்றனர். இதேபோல், டெல்லியில் உள்ள செவிலியர்கள் அனைவரும் நீண்ட காலமாக தங்களின் கோரிக்கைகளை வைத்து வந்தனர்.
தமிழகத்தில் அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் – அரசாணை வெளியீடு!
Follow our Instagram for more Latest Updates
தற்போது தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் நவம்பர் 16ம் தேதி பொது விடுமுறை எடுக்க உள்ளதாக டெல்லி செவிலியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பணிக்கான செயல்முறைகளை முறைப்படுத்துவது, ஊழியர்களின் பதவி உயர்வு நிலுவை மற்றும் புதிய பணி வாய்ப்புகளை உருவாக்குவது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற மேலும் தாமதப்படுத்தினால் நவம்பர் 30ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.