தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் கருத்து!

0
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 பள்ளிகள் திறப்பு - பெற்றோர்கள் கருத்து!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 பள்ளிகள் திறப்பு - பெற்றோர்கள் கருத்து!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் கருத்து!

தமிழகத்தில் வருகிற நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவிற்கு பெற்றோர்கள் மத்தியில் சில மாற்றுக் கருத்துகள் நிலவுகின்றன.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் நோக்கில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் பாதிப்பு நிலவரத்தை பொறுத்து மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டன. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கையாக பள்ளிகளை திறப்பது குறித்து கல்வியாளர்கள் கேள்வி எழுப்பினர். அரசும் இது தொடர்பாக ஆராய்ந்து செப்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறந்தது. ஆனால் முதற்கட்ட நடவடிக்கையாக 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் நேரடி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டது. பிற வகுப்புகளுக்கு ஆன்லைன் / கல்வி தொலைக்காட்சி வழியே வகுப்புகள் எடுக்கப்பட்டது.

TNPSC குரூப் – 4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு (ம)சான்றிதழ் சரிபார்ப்பு – தேதி அறிவிப்பு !

இதனிடையே நேரடி வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் குறிப்பிட்ட பள்ளிகள் மட்டும் மூடப்பட்டு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. சில நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு பிற மாணவர்கள், ஆசியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடர்ந்து வருகிறது. இதனால் அடுத்தகட்டமாக தொடக்க, நடுநிலை பள்ளிகளை திறப்பது குறித்து நேற்று முதல்வர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் முடிவில், 1 ஆம்‌ வகுப்பு முதல்‌ 8 ஆம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவ மாணவியர்‌, பள்ளி செல்லாமல்‌பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும்‌ மன அழுத்தத்தையும்‌ சமுதாயத்தில்‌ பெரும்‌ கற்றல்‌ இடைவெளியையும்‌ இழப்பையும்‌ ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள்‌, கல்வியாளர்கள்‌, பெற்றோர்கள்‌ தெரிவித்ததைக்‌ கருத்தில்‌ கொண்டு, அனைத்து பள்ளிகளிலும்‌, 1 ஆம்‌ வகுப்பு முதல்‌ 8 ஆம்‌ வகுப்பு மாணவ மாணவியருக்கான வகுப்புகள்‌, கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி 01-11-2021 முதல்‌ நடத்த அனுமதிக்கப்படும்‌ என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் நவ.1 முதல் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – தமிழக அரசு அனுமதி!

தமிழக அரசின் இந்த முடிவிற்கு பெற்றோர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். சிலர் கூறுகையில், தமிழக அரசு பள்ளிகள் திறப்பில் அவசரம் காட்டுவதாக தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே 9 முதல் 12ம் வகுப்புகளில் சில மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ள நிலையில் அடுத்தகட்டமாக 6, 7, 8 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாம். ஒரே நேரத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு திறந்தால் சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளை பின்பற்றுவது கடினம் என தெரிவித்து உள்ளனர். ஒரு சில பெற்றோர்கள், அரசின் முடிவை ஏற்றுக் கொண்டு உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!