வந்தே பாரத் ரயில்.. 5வதாக சென்னை | மைசூர் இடையே இயக்கம் – நவ.10 முதல் ஜாலியா பயணிக்கலாம்!

0
வந்தே பாரத் ரயில்.. 5வதாக சென்னை | மைசூர் இடையே இயக்கம் - நவ.10 முதல் ஜாலியா பயணிக்கலாம்!
வந்தே பாரத் ரயில்.. 5வதாக சென்னை | மைசூர் இடையே இயக்கம் - நவ.10 முதல் ஜாலியா பயணிக்கலாம்!
வந்தே பாரத் ரயில்.. 5வதாக சென்னை | மைசூர் இடையே இயக்கம் – நவ.10 முதல் ஜாலியா பயணிக்கலாம்!

நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 4 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 5வது ரயில் எங்கு இயக்கப்பட உள்ளது என்பது குறித்து பார்ப்போம்.

வந்தே பாரத் ரயில்:

இந்தியாவில் பொது போக்குவரத்துகளில் ஒன்றான ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கேற்ப ரயில்வே துறையானது பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் இருக்கும் பெருநகரங்களை இணைக்கும் வகையில் ‘வந்தே பாரத்’ என்ற திட்டத்தின் கீழ் 75 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் இதற்கான பணிகள் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் முடிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து ‘வந்தே பாரத்’ ரயில் ஆனது ஐ.சி.எஃப்-ஆல் வடிவமைக்கப்பட்டது தான். கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மொராதாபாத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனால் ட்ரைன்-18 என்ற மறுபெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை வந்தே பாரத் ஆனது 4 நகரங்களில் செலுத்தப்படுகிறது. அதாவது புதுடெல்லி – வாரணாசி , புதுடெல்லி – ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, காந்திநகர் – மும்பை, உனா – டெல்லி உள்ளிட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு அரசு வைத்த ஆப்பு – இனி கவனம் மக்களே!

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து 5வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையானது, சென்னை முதல் மைசூர் வரை இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில் சேவையானது வருகிற நவம்பர் 10ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சென்னையில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!