டிச. 03 உலக மாற்றுத்திறனாளிகள் தினம் – தமிழகத்தில் சிறப்பு ஏற்பாடு! மாவட்ட ஆட்சியர் தலைமை!
தமிழகத்தில் வரும் டிசம்பர் 3ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் நடப்பாண்டு மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் தினம்:
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உதவி வருகிறது. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு சார்பாக பராமரிப்புத்தொகை மற்றும் மாதந்தோறும் உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கென்று சிறப்பு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதனை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் 75% கட்டண சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் மாற்றுத்திறனாளிகள் ஏறி அமந்து பயணம் செய்ய கூடிய வசதிகள் கொண்ட பேருந்துகள் வாங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 3ம் தேதி சென்னை இராயபுரம் மண்டலத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
அதிரடியாக சரிந்த ஆபரணத்தங்கத்தின் விலை – ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
அம்மாவட்டத்தில் உள்ள அர்த்தூண் ரோடு பகுதியில் அமைந்துள்ள சென்னை உருது பெண்கள் தொடக்கப் பள்ளியில் டிசம்பர் 3ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள், கலை பண்பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. இந்த விழாவில் மாற்று திறனாளிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.