தமிழக மருத்துவ மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கால அவகாசம் பிப்.18 வரை நீட்டிப்பு!

0
தமிழக மருத்துவ மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - கால அவகாசம் பிப்.18 வரை நீட்டிப்பு!
தமிழக மருத்துவ மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - கால அவகாசம் பிப்.18 வரை நீட்டிப்பு!
தமிழக மருத்துவ மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கால அவகாசம் பிப்.18 வரை நீட்டிப்பு!

தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வருகிற 16ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதனை தற்போது மேலும் சில நாட்களுக்கு நீட்டித்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை

மருத்துவ படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நீட் தேர்வு மருத்துவ படைப்புகளான MD/MS மற்றும் PG டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஆகும். இதனை கடந்த 2019ம் ஆண்டு முதல் தேசிய தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இத்தேர்வு இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கும் நடத்தப்படுகிறது. இத்தேர்வு தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.

ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் புதிய நபரை இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 11ம் தேதி நடைபெற்றது. மேலும் இதற்கான முடிவுகள் வெளியான பிறகு தரவரிசை பட்டியல் வெளியாகியது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 12ம் தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள www.mcc.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அத்துடன் கலந்தாய்வு முடிந்த பிறகு இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான பணிகள் நடைபெறும் என்று மருத்துவ சேவை இயக்ககம் தெரிவித்தது .

கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்பு – பிப்.21ம் தேதி தொடக்கம்!

இதையடுத்து மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை வருகிற பிப்ரவரி 16ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் அவகாசத்தை நீட்டித்துள்ளதாக மருத்துவக்கல்லி இயக்குனர் நாராயண பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். அதன்படி மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை வருகிற பிப்ரவரி 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு வாரம் அறிமுக வகுப்புகள் நடைபெறும். மேலும் அரசு பள்ளி மாணவர்களிடம் கூடுதல் கட்டணங்கள் ஏதும் வசூலிக்க கூடாது என்று மருத்துவக் கல்வி இயக்கம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!