Post Office ல் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – ரூ. 1,12,400 வரை சம்பளம்! முழு விவரம் இதோ!
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள தொழில்நுட்ப மேற்பார்வையாளர் பதவி குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்கு செப்டம்பர் 19 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறை
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடம் குறித்தான விவரங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்நிலையில், புதிய காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான புதிய அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்திய அஞ்சல் துறையில் தொழில்நுட்ப மேற்பார்வையாளர் பதவிக்கு காலிப் பணியிடம் இருக்கிறது. விருப்பமும் தகுதியும் பெற்றவர்கள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், ஜூலை 1, 2018 ம் தேதியின்படி விண்ணப்பத்தாரரின் வயது 22 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதியான விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்ப மேற்பார்வையாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதியுடன் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் நடைமுறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – புதிய வருகை பதிவு செயலி அறிமுகம்
இது மட்டுமல்லாமல் ஏற்கனவே ஆட்டோமொபைல் நிறுவனத்தில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அரசு வேலையில் இரண்டு வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டி வர்த்தக சோதனை மூலமாகவே தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும், தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்தான தகவல்கள் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு 7வது மத்திய ஊதியக் குழுவின் படி ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400 வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Good