தமிழகத்தில் மாணவர் உதவி எண்கள் அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் மாணவர் உதவி எண்கள் அறிவிப்பு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் மாணவர் உதவி எண்கள் அறிவிப்பு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் மாணவர் உதவி எண்கள் அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் மாணவர்கள் தங்களது குறைகள், ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பதிவு செய்யவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கல்வி தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தகவல் மையத்தின் பணிகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

கல்வி தகவல் மையம்:

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இதர துறைகள் குறித்த தேவையான தகவல்கள், தெளிவுரைகள், ஆலோசனைகள் ஆகியவற்றை மாணவ-மாணவிகள் பெறுவதற்காக கல்வி தகவல் மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் (14417/ 1098) வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிக்கூடங்கள், சிறப்புப் பயிற்சி மையங்கள், நூலகங்கள், பள்ளிக் கட்டணம், புத்தகங்கள் விநியோகம், தேர்வு நடைபெறும் நாட்கள், விண்ணப்பிக்கும் முறை, நலத்திட்டங்கள்; அவற்றைப் பெறும் முறை போன்ற பல்வேறு தகவல்களை பெற தமிழகத்தில் 32 மாவட்டங்களிலிருந்து 24 மணி நேரமும் இந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

மேலும் மாணவர்களின் திறமை, ஆர்வத்துக்கேற்ப உயர்கல்வி பயில வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். தேர்வு தொடர்பான அச்சம் நீங்கி, தன்னம்பிக்கையூட்டும் உளவியல் ஆலோசனைகள் இந்த மையத்தில் அளிக்கப்படும். இதையடுத்து மாணவர்கள் தங்களது குறைகள், ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பதிவு செய்யவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் இந்தத் தகவல் மையம் உதவும். மேலும் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களின் திறனை மேம்படுத்த வழிகாட்டுதல்; மாணவர்களின் திறன் மேம்பாடு, முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டமிடலுக்கு தேவையான பயிற்சிக் கையேடுகள் வழங்குதல், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு விதமான உதவித்தொகைகள், கடனுதவி குறித்து தகவல் அளித்தல் போன்ற பணிகளையும் இந்த கல்வி தகவல் மையம் மேற்கொள்ளும்.

இந்தியாவில் நாளுக்கு நாள் வீரியமெடுக்கும் குரங்கம்மை – 8 பேர் பாதிப்பு

இந்த மையத்தில் அமர்த்தப்பட்டுள்ள ஊழியர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள். அவர்களுக்கு கல்வி, தொழில்நுட்பம் என பல துறை சார்ந்த பயிற்சிகள் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. எனவே அரசின் இந்தத் திட்டத்தை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்நிலையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் உள்ள இ-சேவை கல்வி தகவல் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அத்துடன் இ-சேவை மையம் மூலம் மாணவர்களின் குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர். தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதியும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் அரசாங்கம் பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!