4% அகவிலைப்படி (DA) உயர்வு – மாநில முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!
இந்தியாவில் மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் அகவிலைப்படியை 4% உயர்த்தி அறிவித்தது. இதனால் மொத்த அகவிலைப்படி 38% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது உத்திரபிரதேச மாநில அரசும் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப இரண்டு முறை அகவிலைப்படியை (DA) உயர்த்தி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு இந்த ஆண்டு 2 – வது முறையாக மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி அகவிலைப்படி 34% இருந்து 4% உயர்த்தப்பட்டு 38% ஆக அறிவிக்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் தற்போது உயர்த்தப்பட்டுள்ள அகவிலைப்படி 2022 ஜூலை மாதம் முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாற்ற மாநில அரசு ஊழியர்களும் மத்திய அரசு ஊழியர்களை போலவே தங்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தீபாவளிக்கு பின்பு மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து – ஓமைக்ரான் BF.7 பரவல் அதிகரிக்க வாய்ப்பு!
Exams Daily Mobile App Download
இந்த கோரிக்கைக்கு இணங்க உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை தற்போது 4% உயர்த்த அம்மாநில முதல்வர் முடிவு செய்துள்ளார். அதன்படி வரவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் அகவிலைப்படி 34% இருந்து 38% ஆக உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்