தமிழக தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்படும் 25% இடஒதுக்கீடு குறித்து உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மேலும் இந்த உத்தரவு ஏழை எளிய மாணவர்களுக்கு உதவும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டாய கல்வி:
மத்திய அரசின் இலவச கட்டாய சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு வேண்டும் என அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஒரு முழுமையான கல்வி உரிமை சட்டம் ஆகும். மேலும் ஏழை எளிய மாணவர்கள் இலவசமாக கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக கல்வி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த இலவச கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது.
அக்னிபாத் திட்டம்: இந்திய கடற்படையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் – ரூ.40,000 வரை சம்பளம்!
அதன் படி தனியார் பள்ளிகளின் அருகில் வசிக்கும் ஏழை மாணவர்கள் மற்றும் சமூகத்தில் நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு 25% இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்க கல்விக்கே லட்சங்களில் கட்டணம் வசூலித்துக் கொண்டிருக்கும் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய குழந்தைகளும் சேர்ந்து கல்வி கற்க முடியும் என்ற நிலை இந்தச் சட்டத்தின் மூலம் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய இட ஒதுக்கீட்டின் மூலம் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பள்ளி நிர்வாகங்கள் தடுத்து நிறுத்தவோ, பள்ளியிலிருந்து வெளியேற்றவோ முடியாது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்படும் 25% இடங்களில் 6 கிலோ மீட்டர் தூரம் வரை வசிக்கும் மாணவர்களை சேர்க்கலாம் என் உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஆர்.டி.இ சட்டப்படி ஒதுக்கப்படும் 25% இடங்களில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வசிப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்கிய பிறகும், 3 கிலோ மீட்டர் தூரத்தில் வசிப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அதன் பிறகும் காலியிடம் இருந்தால் 6 கிலோ மீட்டர் தூரத்தில் வசிப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தற்போது கூறப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் ஆர்.டி.இ சட்ட ஒதுக்கீடு இடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனை கடைபிடித்தால் மட்டுமே ஏழை எளிய மாணவர்களின் கல்வி தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது.