தமிழகத்தில் நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கான வழிமுறைகள் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

0
தமிழகத்தில் நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கான வழிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கான வழிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கான வழிமுறைகள் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஒரு குழுவும், மாநில அளவில் பள்ளி கல்வி ஆணையர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நல்ல ஒழுக்கங்களை கற்றுக் கொள்ளும் இடமாக பள்ளிகள் திகழ்கின்றன. அத்தகைய பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒழுக்கம், கல்வி, நற்பண்பு உள்ளிட்டவைகளை ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். மேலும் மாணவர்கள் நலனுக்காக ஒவ்வொரு நாளும் பணியாற்றும் ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதை தமிழக அரசு வழங்கி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் 2021-2022 ம் கல்வி ஆண்டுக்கான டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதை பெற 38 மாவட்டங்களில் இருந்து 386 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் இந்த விருதினை பெற கூடிய ஆசிரியர்களை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்று பள்ளி கல்விதுறை சில வழிமுறைகளை தெரிவித்துள்ளது. இதற்காக பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, கீழ்க்கண்ட வழிமுறைகளை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அவை,

1. கற்பித்தல் பணியில் தகுதியுள்ள ஆசிரியர்கள் உரிய படிவத்தில் விண்ணப்பம் செய்து மாவட்ட தேர்வு குழுவின் முன் நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு மதிப்பீடு செய்ய வேண்டும். அவ்வாறு மாவட்ட குழுவால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை மாநில தேர்வு குழுவின் பரிசீலனைக்கு வருகிற 14ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அந்த பட்டியலின் அடிப்படையில் மாநில தேர்வு குழு இறுதி பட்டியலை தயாரிக்க வேண்டும்.

தமிழகத்தில் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் திட்டம் – அரசின் முக்கிய அப்டேட்!

2. அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை தவிர அலுவலக பணியில் பணியாற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கூடாது. மேலும் பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் எந்தவித குற்றச்சாட்டுக்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படாதவராகவும், பொது வாழ்வில் தூய்மையானவராகவும், பொது நலத்தில் நாட்டம் கொண்டவராகவும், பள்ளி மாணவர்கள் சேர்க்கை மற்றும் தேர்ச்சி வீதத்தை உயர்த்துதல், கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் கல்வி தரத்தை முன்னேற்ற பாடுபடுபவராகவும் இருக்க வேண்டும்.

3. அரசியலில் பங்கு பெற்று அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்கள் கண்டிப்பாக பரிந்துரைக்க கூடாது. கல்வியினை வணிக ரீதியாக(டியூஷன் எடுப்பவர்கள்) கருதி செயல்படும் ஆசிரியர்களும், நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும் ஆசிரியர்களையும் இந்த விருதுக்கு தகுதியற்றவர்களாக கருத வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் பள்ளிக்கல்விதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!