தமிழகத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில், நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நாகூர் நாகநாதர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று (ஜூலை 12) அனைத்து பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு மத்தியில் தடை செய்யப்பட்டிருந்த திருவிழாக்கள், மத கூட்டங்களை நடத்துவதற்கு தற்போது அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம், நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்த வரிசையில் தற்போது நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோவில்களில் ஒன்றான நாகூர் நாகநாதர் கோவில் தேரோட்டம் இன்று (ஜூலை 12) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இதை முன்னிட்டு நாகை வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று (ஜூலை 12) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில், நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள நாகூர் நாகநாதர் திருக்கோவிலில் ஆனிமாத பிரம்மோற்சவ திருவிழா இன்று (ஜூலை 12) நடைபெற்று வருகிறது.
அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு முடிவு!
அந்த வகையில் இந்த திருவிழாவை முன்னிட்டு தினமும் சுவாமி அம்பாளுக்கு பல்வேறு வகையான அபிஷேகம், அலங்கார தீபாராதனை, வீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இப்போது இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (ஜூலை 12) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நாகை வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் ஜூலை 30ம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் வேலைநாளாக செயல்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.